Powered by Blogger.
RSS

துன்பம் நேர்கையில் ...

திரைப்படம் : ஓர் இரவு 
வரிகள் : பாவேந்தர் பாரதிதாசன் 
இசை : M.M.தண்டபாணி தேசிகர் 
குரல் : M.S.ராஜேஸ்வரி, வர்மா 


ஒலிவடிவம் 




துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா? 

(துன்பம்)
 
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக்காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக்காட்ட மாட்டாயா? 
(துன்பம்)
அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது - யாம்
அருகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
(துன்பம்)
 
புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டிஉனை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா? - தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா? 
(துன்பம்)


காணொளி வடிவம் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment